உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் – சுகாஷ் கண்டனம்

இலங்கை செய்திகள் 41 நிமிடங்கள் முன்
68 பார்வைகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர், அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள், விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாஷ் தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் தமது கட்சி தொடர்ந்தும் அரணாக நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி ஒன்றின் மீது கல்லெறிந்து அங்கிருந்த சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாஷ் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளிகள் மற்றும் குறித்த நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவை இருந்தபோதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது அப்பட்டமான சட்டவிரோத செயற்பாடு எனத் தெரிவித்த சுகாஷ், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும், வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கும், சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கிலிருந்து ஜனநாயக ரீதியாக வெளியேற்றுவதே வழி எனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம்…

52 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி14 வயது சிறுவன் உயிரிழப்பு!

பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லேகம பகுதியைச் சேர்ந்த சிறுவன்,…

50 0 0
இலங்கை செய்திகள்

2026 தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக…

70 0 0
இலங்கை செய்திகள்

நிலையான உணவு முறைமைகள் பற்றிய இலங்கையின் பாரம்பரிய அறிவிலிருந்து உலகிற்கு முக்கியமான ஒரு பாடம்

பூட்டானில் நடைபெற்ற உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் தொடர்பான இலங்கையின் பாரம்பரிய அறிவை பிரதமர் உலகிற்கு எடுத்துரைத்தார். 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி பூட்டானின்…

33 0 0