உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

வடக்கில் 54 நீர்ப்பாசனக் குளங்களில் 43 குளங்களின் நீர்மட்டம் குறைவு!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

வடமாகாணத்தில் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.

அவற்றில் விசுவமடு குளம் உள்ளிட்ட 3 குளங்களில் மாத்திரமே சுமார் 50 சதவீத நீர் காணப்படுவதாகவும், இரணைமடு குளம் உள்ளிட்ட 8 குளங்களில் சுமார் 25 சதவீத நீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 43 குளங்களிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும், பெரும்பாலான குளங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவான நீரே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாகவும், இதற்கு எல் நினோ தாக்கம் மாத்திரமன்றி, புனரமைப்புப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டமை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை நீர் ஆவியாகின்றமை ஆகியவையும் முக்கிய காரணங்களாகும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காலபோகச் செய்கையை செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், தற்போதைய குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழைவீழ்ச்சி மற்றும் குளங்களின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்த பின்னரே காலபோகச் செய்கைக்கான நீர் விநியோகம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நித்திரை கலக்கத்தால் விபத்து: பள்ளத்தில் பாய்ந்த கார்

யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, நித்திரை கலக்கத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்ததில், காரில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல்…

78 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானை–புகையிரத மோதலைத் தடுக்க புதிய தொழில்நுட்பத் திட்டம்!

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை…

62 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

58 0 0