உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

உலக செய்திகள் 22 மணி நேரம் முன்
75 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு சாதாரண இயற்கைப் பேரிடர் அல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், பருவநிலை மாற்றத்தால் இவ்வாறான அனர்த்தங்களின் அபாயம் அதிகரித்து வருவதால் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பனிச்சரிவுக்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகவில்லை என்றாலும், புவி வெப்பமடைதல் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பேரழிவுகளின் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இமயமலைப் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

38 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

45 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

61 0 0
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்:

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய்…

75 0 0