உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

தனது சட்டமன்ற உறுப்பினர்களிடம் சத்தியம் வாங்கிய தமிழக முதல்வர்!

இந்திய செய்திகள் 27 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் நிலை குறைய வேண்டும் என்றும். குடும்பப் பிரச்சினைகளால் பெற்றோர்களைப் பிரித்து வைக்கும் போக்கு மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னைய காலங்களைப் போல் அல்லாமல், இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என தமிழக அமைச்சர்…

40 0 0
இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

73 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

90 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

55 0 0