உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

யாழ். பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு?

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
46 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான நிரந்தர நியமனத்தில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்ற நிலையில், 71 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நீண்டகாலமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தங்களைப் புறக்கணித்து, புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலத்தை கருத்திற்கொண்டு நியாயமான தீர்வை வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் உயி** மா*ப்பு

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ச**மாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் தூ**ட்டு த**கொ** செய்து கொண்டு…

39 0 0
இலங்கை செய்திகள்

6 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

67 0 0
இலங்கை செய்திகள்

பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்…

52 0 0
இலங்கை செய்திகள்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,…

32 0 0