இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!
ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும் ஹட்டனில் இருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியது.
இச் சம்பவம் கடவளை பகுதியில் உள்ள பிரதான சாலையில் வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது கார் பலத்த சேதமடைந்ததுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ் விபத்து குறித்து கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


