உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நாட்டில் மீண்டும் இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நீண்டகால இன மோதல்கள் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான அழிவுகரமான அனுபவங்களின் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும், மீண்டும் எவ்வித இன மோதல்களும் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது எனத் தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

முன்னர் செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்ட முறையில் செயற்படுத்தப்படுவதாகச் சமூகத்தில் ஒரு கருத்து நிலவிய போதிலும், நாட்டை கட்டியெழுப்புவதன் மிக முக்கிய பகுதியாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி வருவதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்துடனான அனைத்து முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி முறையில் மேற்கொள்ளக்கூடிய அமைப்பொன்றை அறிமுகப்படுத்தி, அரச சேவையை மேலும் கவர்ச்சிகரமான தொழிற்துறையாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாமும் அரசாங்கமும் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தினாலும் மக்களுக்குத் தீங்கு ஏற்பட இடமளிக்க மாட்டோம் என மேலும் உறுதியளித்த ஜனாதிபதி, வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை விரைவுபடுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதையே எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தீர்மானங்களை எடுக்கும் போது சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் அது ஆராயப்படுவதால், சிறிய சிறிய முரண்பாடுகள் எழுந்தாலும் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல் தொடர்பில் புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை…

49 0 0
இலங்கை செய்திகள்

கிரகரி வாவியின் நீரில் விஷத்தன்மை?

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்…

53 0 0
இலங்கை செய்திகள்

மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர்…

37 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி…

13 0 0