உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

உலக செய்திகள் 56 நிமிடங்கள் முன்
35 பார்வைகள்

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குழந்தை பிறந்தது முதல் 17 வயது நிறைவடையும் வரையில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மொத்தமாக சுமார் ரூ.53 இலட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை பெற்றோருக்குக் குறைக்கும் வகையிலும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய நிதியுதவி திட்டம் அதில் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. ஹோர்முஸ்…

60 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு…

47 0 0
உலக செய்திகள்

பேரான் ட்ரம்ப்பைக் கொ@லை செய்ய சதித்திட்டம் – அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகன் பேரான் ட்ரம்ப்பைக் (Baron Trump) கொலை செய்வதற்கான சாத்தியமான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி…

67 0 0
உலக செய்திகள்

இங்கிலாந்தில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி!

Athavan NewsHome உலகம் இங்கிலாந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலிHanushya P by Hanushya P 2026/08/24 in இங்கிலாந்து, உலகம்67 1A A029SHARES973VIEWSShare on FacebookShare…

56 0 0