உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு சுமந்திரன் கடும் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
73 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நிகழ்வொன்று இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதுடன், அவர்களை மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆடைகள் கழரும் நிலையிலும் இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர்.

இந்த வன்முறையை கைபேசியினூடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிருந்தவாறே அவதானித்தார் என்றும், போராட்டம் பற்றிச் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார் என்றும் செய்திகள் வெளியாயின.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மற்றும் தாய்மார்களை இலங்கைப் பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோல், இந்த நிகழ்வுகளை உள்ளேயிருந்து தனது கைபேசியில் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த நீதி அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரின் செயலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!

இலங்கையிலிருந்து நூதன முறையில் இந்தியாவுக்குதங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு! இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

உழவு இயந்திரம் மோதி சிறுமி உயிரிழப்பு!

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த…

36 0 0
இலங்கை செய்திகள்

நிதி அல்ல எமக்கு நீதியே முதன்மையானது.!

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு.…

43 0 0
இலங்கை செய்திகள்

தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.!

தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்…

56 0 0