உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஆபத்தான நிலையில் காணப்படும் பாலம்; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
54 பார்வைகள்

தலவாக்கலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த இரும்புப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அதனை உடனடியாக புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் போக்குவரத்து தேவைகளுக்காகவும், தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதற்காகவும் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

1972 காலப்பகுதியில் கம்பெனி தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட பின்னர் உரிய முறையில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் மற்றும் உலோகப் பகுதிகள் துருப்பிடித்து வலுவிழந்துள்ளன.

மேலும், பாலத்தின் சில பகுதிகளில் உடைந்தும் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதுடன், பாலத்தின் பாதுகாப்புத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்போது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தை ஊட்டுவள்ளி, பிரேமோர், நல்லதண்ணி, உட்லெக், சின்ன தோட்டம் மற்றும் சென்றெகுலர்ஸ் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலத்தின் போக்குவரத்து தடை காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அவசர மருத்துவ சேவைகளைப் பெற வேண்டிய நோயாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வது, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வது, தொழிலாளர்கள் தொழில் நிலையங்களுக்கு செல்வது உள்ளிட்ட அத்தியாவசியப் பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் நிலை மேலும் மோசமடைந்தால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல வருடங்களாக பெருந்தோட்ட மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்து வரும் இந்தப் பாலம், தற்போது உரிய பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காணப்படுவது குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பாலத்தை உடனடியாக நேரில் பார்வையிட்டு, தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டு, அவசர அடிப்படையில் புனரமைப்பு அல்லது புதிய பாதுகாப்பான பாலம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், புனரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கு மாற்று பாதுகாப்பான பாதை அல்லது தற்காலிக பாலம் ஒன்றை ஏற்படுத்தி வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை தோட்ட நிர்வாகம் பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள போக்குவரத்தை சீர் செய்வதற்கு பாலத்தினை புனரமைக்கும் பணியினை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

தற்போது தடுப்புக்காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற…

18 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

40 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…

75 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

81 0 0