உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
21 பார்வைகள்

தற்போது தடுப்புக்காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்தத் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரான் பாசிக் குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்து இந்த வணிக நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார்.

அத்தோடு டுபாயில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஒரு ஜீப்பை வைத்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள கைபேசிக் கடைகள் உள்ளிட்ட சொத்துக்களும் உள்ளடங்குகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று புதன்கிழமை (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை…

58 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச்…

45 0 0
இலங்கை செய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்.!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்த குழுவுக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

42 0 0