உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

காணாமல்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
108 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினம் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று,மட்டக்களப்பு மேற்கு,ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இன்றைய தினம் சாட்சியங்கள் பெறப்பட்டு மறுமலர்ச்சி உதவி வழங்குவதாகவும் மரண பதிவும் வழங்குவதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டதாக முறைப்பாடுகளை வழங்கியோர் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம்,பட்டிப்பளை பிரதேச செயலகம்,வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற 295 முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 78முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 53விசாரணைசெய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

47 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0