உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி கவலை!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
123 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரச்சினைகளை சரியான விதத்தில் தாங்கள் பேசுவார்கள் என்றும் ஆனால் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தங்களால் முடியுமா என்று கூற முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தங்களால் இயன்றவரை எங்களுக்காக வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.

தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டும், இங்கே நடந்தது இனப்படுகொலைதான் என்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சர்வதேசத்தின் ஊடான நீதி விசாரணை தான் எங்களுக்கு வேண்டும்.

உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ, OMP அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாங்கள் எத்தனை ஆணை குழுக்களை சந்தித்துள்ளோம், எத்தனையோ ஆட்சியாளர்களை சந்தித்துள்ளோம் இவை எல்லாவற்றையும் கடந்து தான் நாங்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோரியுள்ளோம்.

சர்வதேசம மீது உள்ள நம்பிக்கையில் தான் நாங்கள் இற்றைவரை சர்வதேசத்திடம் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.

எங்களுடன் இருந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் 450க்கும் மேற்பட்டோர் இற்றைவரை உயிரிழந்து விட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.

கொடூர யுத்தத்தின் பின்னர் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம்தான் விசாரணை செய்ய வேண்டும். கொலையாளிகள் ஒருபோதும் எமக்குத் தீர்வினை தர மாட்டார்கள். கொலையாளிகள் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

47 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0