முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு.!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று(17) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி இது ஒரு உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அத்துருகிரிய பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்ததுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார்.