உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் அர்ச்சுனா எம்.பியின் அட்டகாசம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
110 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதியளித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பநிலை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கூட்டத்துக்குள், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திடீரென நுழைந்து குழப்பத்தை விளைவித்தார் என்று குறிப்பிட்ட அமைச்சர், “சிவபூஜையில் கரடி புகுந்தது போல், அவர் உள்ளே புகுந்து பைத்தியக்காரத்தனமாகச் செயற்பட்டு கூட்டத்தை இடைநிறுத்தச் செய்துவிட்டார்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனைத்துக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பங்களை விளைவித்து வருவதுடன், அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றார் என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“அபிவிருத்திக் குழுக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக்கூடாது. இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளால், அந்த அதிகாரிகள் சமூகத்தின் முன் தலைநிமிர்ந்து செல்ல முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்துக்கு தற்போதைய சம்பவமே சிறந்த சான்றாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் எதிர்கால இருப்பு குறித்து அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது. எனவே, குழப்பமடைந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை மீண்டும் விரைவில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் இது குறித்து உறுதியான மற்றும் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

19 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0