உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
64 பார்வைகள்

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட புலோப்பளை ஊடாக செல்வபுரம் செல்லும் வீதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட கிளாலி பாடசாலை ஊடாக கடற்கரை செல்லும் வீதியில் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நாட்டி வைத்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0