உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 12 மணி நேரம் முன்
77 பார்வைகள்

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் பெய்து வரும் கடும் மழையால் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிட்டகொங் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் தகவலின்படி, நாட்டின் 64 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகளில் அதிகபட்சமாக கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, சட்டோகிராம் பகுதியில் 13 பேரும், பந்தர்பன் மாவட்டம் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் அகதிகள் முகாம்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் அபாயம் இருப்பதாக பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

67 0 0
உலக செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்…

60 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

74 0 0
உலக செய்திகள்

பயணப் பாதையில் வாசகம் அமைத்த விமானி!

லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் ‘I’m bored’ என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில்…

82 0 0