உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

பிலிப்பைன்ஸில் மண்சரிவு; பலர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
39 பார்வைகள்

பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் ‘பாவி’ சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் ‘இண்டே’ (Inday) என அழைக்கப்படும் இந்தச் சூறாவளி கடந்த புதன்கிழமை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது. இது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பினூடாக வடக்கு லுசோனை நோக்கி நகர்கையில் சற்று பலவீனமடைந்துள்ளது.

மின்டனாவோ தீவின் தெற்கு சரங்கனி மாகாணத்தில் உள்ள மாலபடன் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு மாலபடன் நகர மேயர் சால்வே சும்போ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் தெற்கு மாகாணமான லானாவ் டெல் சுர் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தீவுகளான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இந்த அதிதீவிர சூறாவளி தாக்கியது.

அங்கு உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

சனிக்கிழமை (11) தைவானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் சில பகுதிகளிலும் இந்தச் சூறாவளி கனமழையைக் கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தைவானில் புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இது சீனாவில் தரைதட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

63 0 0
உலக செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்…

55 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…

73 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

72 0 0