கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் கரும்பு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று காலை பார்வையிட்டார்.
வடமாகாண ஆளுநரோடு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.


