உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!
மட்டக்களப்பு கரடியனாறு – தும்பாஞ்சோலை பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சேவையான 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.