தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல் – ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு.!
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் சென்ற ஐந்து சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்பிட்டிகம – சந்துன்புர வீதியில் வீதி தடைகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களைப் பொலிஸார் நிறுத்திச் சோதனை செய்தனர்.
அப்போது, தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு புத்தர் சிலை மற்றும் இரத்தினக் கற்களாக சந்தேகிக்கப்படும் மூன்று நீலக்கற்கள், மேலும் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டசந்தேக நபர்களில் மூவர் பெண்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்களாகவும், பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26, 53 மற்றும் 55 வயதுடையவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது நடவடிக்கையின் போது ஒருவர்தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.