உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இன்று இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இந்தத் தகவலை இன்று உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

எதிர்பார்ப்பு
மத்திய கிழக்கு போர்ச் சூழல், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை அறிவிப்பு போன்ற நெருக்கடியான தீர்மானங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த உரை அமையவுள்ளது. தற்போதைய சவால்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்த மேலதிக விளக்கங்களை ஜனாதிபதி இதன்போது வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரை
அதேநேரம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் அங்கு விரிவாக உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0