அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்.!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் உருளைக்கிழங்கில் 80 சதவீதமானவையும், வெங்காயத் தேவையில் 80 சதவீதமானவையும், பருப்புத் தேவையில் 100 சதவீதமானவையும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள் காரணமாக இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு நாம் பெருமளவில் இறக்குமதியையே நம்பியிருக்கிறோம்.
எனவே, தற்போதைய சர்வதேச சூழலில் இவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், முறையற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாகச் செயற்படும்.