அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து இறுதி முடிவு இல்லை – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு.!
அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமுல்படுத்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விளக்கம் வழங்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.தற்போதைய நிலையில் அரச ஊழியர்கள் தங்களின் அன்றாட பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், இதுகுறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரச நிறுவனங்களின் தினசரி பணிகள் தடையின்றி மற்றும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவது குறித்து துறைசார் அதிகாரிகளுடன்தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த விடயம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.போக்குவரத்துக்கான எரிபொருள் சவாலை கருத்தில் கொண்டு இத்தகைய நடைமுறையை அரசு பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.