உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தின் சிலை உடைப்பு; சிக்கிய சந்தேகநபர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாணம், சரவணைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்திலேயே நேற்று இந்தச் சிலை உடைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் இருந்த சிலை இனந்தெரியாத நபரால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவின் (சி.சி.ரி.வி.) காட்சிகளைப் பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

புனிதமான வழிபாட்டுத் தலமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0