உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

காலி, பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அனர்த்தம் நேரிட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

மண்டைதீவின் 36 ஆம் ஆண்டு நினைவு கூரல் இன்று அனுஸ்டிப்பு – தீவக மக்களின் கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்! 90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு…

28 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி…

6 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன…

47 0 0
இலங்கை செய்திகள்

நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!

இலங்கையிலிருந்து நூதன முறையில் இந்தியாவுக்குதங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு! இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த…

46 0 0