உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

எல் நினோ தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்

எல் நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மிகவும் தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Organization – WMO) அறிவித்துள்ளது.

அத்துடன், எல் – நினோ எதிர்வரும் பெப்ரவரி வரை நீடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரும் தாக்கங்களையும், அதனுடன் தொடர்புடைய வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல பசிபிக் பகுதியில் நிலவும் அசாதாரணமான வெப்பமானது, கடல் சூழல்களால் உந்தப்பட்டு, எல் – நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுப்பெற்று, இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காலநிலை தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு வரையிலும் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்நிலைகள் வெப்பமடைந்து வருகின்றன. கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து வருகிறது, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செட்டிகுளம் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி. பல்வேறு கோரிக்கைகள்

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (03.09.2026) அபிவிருத்திக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…

47 0 0
இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதுண்டு இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த…

84 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03)…

67 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

. யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று (03)…

50 0 0