எல் நினோ தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
எல் நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மிகவும் தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Organization – WMO) அறிவித்துள்ளது.
அத்துடன், எல் – நினோ எதிர்வரும் பெப்ரவரி வரை நீடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரும் தாக்கங்களையும், அதனுடன் தொடர்புடைய வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பகுதியில் நிலவும் அசாதாரணமான வெப்பமானது, கடல் சூழல்களால் உந்தப்பட்டு, எல் – நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுப்பெற்று, இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காலநிலை தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு வரையிலும் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்நிலைகள் வெப்பமடைந்து வருகின்றன. கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து வருகிறது, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.