உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் குறித்த 09 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 09 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல் நினோ தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மிகவும் தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Organization – WMO) அறிவித்துள்ளது. அத்துடன், எல்…

47 0 0
இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதுண்டு இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த…

62 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

. யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று (03)…

49 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் அதிகார மோகத்தை தோற்கடிக்க வேண்டும் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும்…

56 0 0