உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

மிதக்கும் விளையாட்டு கிராமம்

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
61 பார்வைகள்

ஜப்பானில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ‘கோஸ்டா செரீனா’ என்ற பிரமாண்ட சொகுசுக் கப்பல் மிதக்கும் விளையாட்டு கிராமமாக பயன்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 17,000 வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

வழக்கமாக வீரர்களுக்காக தனியான விளையாட்டு கிராமம் அமைக்கப்படும் நிலையில், கட்டுமானச் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்முறை குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தை ஜப்பான் கைவிட்டுள்ளது.

இதற்குப் பதிலாக 14 தளங்களைக் கொண்ட ‘கோஸ்டா செரீனா’ சொகுசுக் கப்பல் நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, விளையாட்டு கிராமமாக பயன்படுத்தப்படவுள்ளது. கப்பலில் நூற்றுக்கணக்கான அறைகள், உணவகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.

சுமார் 4,000 முதல் 5,000 வீரர்கள் இந்தக் கப்பலில் தங்கவைக்கப்படவுள்ளனர். குறிப்பாக நகோயா துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் நடைபெறும் 20 வகையான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இங்கு தங்குமிடம் வழங்கப்படவுள்ளது.

மற்ற வீரர்கள் தற்காலிக குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் அருகிலுள்ள விடுதிகளில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பில் செலுத்தவில்லை; இளம் பெண்ணுக்கு மொட்டை!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் சுமார் 60,000 தாய் பாட் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயன்றதாகக் கூறப்படும் 18 வயது இளம் பெண்ணுக்கு…

66 0 0
உலக செய்திகள்

16 நாட்கள் விண்வெளியில் உணவின்றி உயிர் வாழ்ந்த பல்லிகள்

விண்வெளியில் புவிஈர்ப்பு விசையற்ற சூழல் உயிரினங்களின் உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதற்காக, கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய அறிவியல் அகாடமி இணைந்து மேற்கொண்ட…

67 0 0
உலக செய்திகள்

எகிப்துக்கு சீன ஜனாதிபதி பயணம்

மேற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து தலைநகர்…

53 0 0
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

58 0 0