உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

செட்டிகுளம் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி. பல்வேறு கோரிக்கைகள்

87 பார்வைகள்

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (03.09.2026) அபிவிருத்திக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச மக்களின் காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தார்.

வீரமாணிக்கங்குளம், முசல்குத்தி பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார். இதற்கு ஒரு மாதத்திற்குள் 250 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என அபிவிருத்திக்குழுத் தலைவர் உறுதியளித்தார்.

கப்பாச்சியில் சுமார் 1,700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் சத்தியலிங்கம் எம்.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இவ்விடயம் நாளை நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பேசப்படும் என தெரிவித்தார்.

மேலும், செட்டிகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்தல், முக்கிய சந்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைத்தல், மக்களின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுவதை நிறுத்துதல், நேரியகுளத்தில் தபால் நிலையம் அமைத்தல் மற்றும் செட்டிகுளத்தில் மின்சார சபை நுகர்வோர் சேவை மையம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

28 0 0
இலங்கை செய்திகள்

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று…

49 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத்…

58 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

56 0 0