உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
42 பார்வைகள்

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 7 உள்நாட்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

எஃப்.பி.ஐ (ய்யணூ) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தாக்குதல் என்றே முடிவு செய்துள்ளன.

‘சனல் 4’ ஊடகத்திற்கு எல்.ரி.ரி .ஈ. அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அஷாத் மௌலானா வழங்கிய பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்கப் பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி எமக்குக் கவலையளிக்கின்றது.

தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.

இந்த விவகாரத்தில் முறையான மற்றும் நியாயமான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் காணப்படும் பாலம்; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

தலவாக்கலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள்…

1 0 0
இலங்கை செய்திகள்

கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழப்பு.!

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

65 0 0
இலங்கை செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள்…

63 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசு சதி.!

தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்…

58 0 0