உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை விஜய்தான் திறந்து வைப்பார் – விஷால் உறுதி!

இந்திய செய்திகள் 2 வாரங்கள் முன்
52 பார்வைகள்

சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் தற்போதைய முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய்யே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இந்தக் கட்டிடப் பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார்.

நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போது இந்தக் கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்பதில் நடிகர் விஷால் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0