கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களது படகு.!
கடல் கொந்தளிப்பு காராணமாக, தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று, நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில், படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக, கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர், படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல நடவடிக்கை எடுத்துள்ள கடற்படையினர், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.