உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அடுத்த அடி அமித் ஷாவிற்கு – கரப்பான் பூச்சி அமைப்பினர் அதிரடி!!!

இந்திய செய்திகள் 3 வாரங்கள் முன்
100 பார்வைகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இன்றி இத்தகைய தடியடி இடம்பெற்றிருக்க முடியாது என்றும், எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை மீதே கேள்விகள் எழுப்பப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.

மேலும், நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் முழுத் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு உள்ளது என்றும் அபிஜீத் தீப்கே சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0