விரைவில் திரைக்கு வருகிறது சூர்யாவின் ’47’ திரைப்படம்
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘சாகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram Studios) சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜித்து மாதவன் தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.
இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியீட்டுத் திகதி மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.