புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!
கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
கொத்மலை பிரதேச சபையின் தலைவர் அஜித் முரமுதலிகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொத்மலை பிரதேச சபையின் உபதலைவர் சண்முகதாஸ், உறுப்பினர்களான புண்ணியமூர்த்தி, செல்வமதன், கமலதீபன் மற்றும் GLOBAL TRADING COMPANY உரிமையாளர் தட்சணாமூர்த்தி அழகுரத்னம்(பாலு ), கொத்மலை பிரதேச சபையின் நூலக பொறுப்பாளர், நூலக உதவியாளர்கள், மடக்கும்புர சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த வாசிகசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் கொத்மலை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


