உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
97 பார்வைகள்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது.

இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானியக் கடலோர நகரமான பண்டார் கமீரில் (Bandar Khamir) உள்ள பாலங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், ஈரான்l ஷாஹர் விமான நிலையம் மற்றும் பண்டார் அப்பாஸில் உள்ள ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதேநேரம், தங்கள் அண்மைய வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.

அண்மைய மாதங்களில், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

இருப்பினும், மோதலின் அண்மைய தீவிர நிலை ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பகுதியில் ஒரு முழுமையான போரை மீண்டும் தூண்டியுள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கைக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலச்சரிவு.!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட…

48 0 0
உலக செய்திகள்

ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்திய ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.…

57 0 0
உலக செய்திகள்

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு,…

80 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரம் – 754 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 754 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…

74 0 0