உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
42 பார்வைகள்

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (18) அதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து குறித்த குளங்களை பார்வையிட்டனர்.

இதன்போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர்.

இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச்செய்கையை சரியான முறையில் நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும். இக்குளம் ஏற்கனவே ‘டித்வா’ புயலின் காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே முழுமையாக இது புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது.

திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இந்த வருடத்தின் பெரும் போகத்திற்கு முற்பகுதியில் இந்தக் குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு, விவசாயிகளின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினுடைய விசேடமான செயல்திட்டமாக இந்த விவசாய குளங்கள் புனரமைத்து விவசாயிகளுக்குக் கொடுப்பதன் ஊடாக, நெல் உற்பத்தியை அதிகரித்து இலங்கையில் காணப்படுகின்ற நெல்லினுடைய தட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தி சார் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

20 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

18 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும்.!

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன இதனை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில்…

29 0 0