கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல!
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகியின் இறுதிச் சடங்கின் போது, அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்கலங்காமல் நின்றது சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் “பாட்டி மீதான அன்பு இல்லையா?” என்பது போன்ற விமர்சனங்களுக்கு, அப்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான மற்றும் ஆழமான விளக்கத்தை அளித்துள்ளார்.
தன் பாட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் தன் அக்கா வர்ஷா என்பதைச் சுட்டிக்காட்டிய அப்சரா, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்த அழகான பிணைப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் அக்கா வர்ஷாவை இழந்த அந்த அதிர்ச்சியிலிருந்து தன் குடும்பம் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று அப்சரா தனது வலியினைப் பகிர்ந்துள்ளார்.
தன் அக்காவும், பாட்டியும் இப்போது சொர்க்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள் என்பதைத் தனக்கான ஒரே ஆறுதலாகப் பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
“கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல. ஒருவரின் கண்ணீரை வைத்து அவரது துக்கத்தை எடை போடாதீர்கள்” என்று கூறியுள்ள அப்சரா, பாட்டியின் மீது தான் வைத்திருக்கும் அன்பை யாரும் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“வாழ்க்கை முடிவுக்கு வரலாம், ஆனால் அன்பு என்றும் முடிவதில்லை என்பதை என் பாட்டி எங்களுக்குக் கற்பித்துள்ளார்” என்று அவர் பதிவிட்டுள்ள இந்த வரிகள், தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.