உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
81 பார்வைகள்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்ட “மிக மோசமான தவறு” என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கிய்வ் மற்றும் நாட்டின் ஏனைய நகரங்களில் இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீதிகளில் இறங்கிப்”ஃபெடோரோவை தொடாதே!”, “வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுக்ரைன் இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவ் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான அதிகாரப் போட்டியே இந்த பதவி நீக்கத்திற்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

ஃபெடோரோவுக்குப் பதிலாக, யுக்ரைன் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான மேஜர் ஜெனரல் யெவ்ஹேனி பிமாரா என்பவரை தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக ஸெலென்ஸ்கி நியமித்துள்ளார். இதற்கிடையில், யுக்ரைனின் புதிய பிரதமராக செர்ஜி முராவியெவ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலச்சரிவு.!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட…

48 0 0
உலக செய்திகள்

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும்,…

97 0 0
உலக செய்திகள்

ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்திய ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.…

57 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரம் – 754 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 754 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…

74 0 0