ஹெய்ஸ்ட் வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்க விரும்பும் திரைப்படத்தின் பாணி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநராக வேண்டும் என்ற முடிவை எடுத்தபோதே, ஒரு குழுவை மையமாகக் கொண்டு சாகசங்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த ‘ஹெய்ஸ்ட்’ (Heist) வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே தனது நீண்டநாள் விருப்பமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படைப்பைத் தேர்வு செய்ய விரும்புவதாகவும், புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரும் நோக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சயின் இந்த கருத்து, தமிழ் திரையுலகில் புதிய தலைமுறை இயக்குநர்களின் அணுகுமுறை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலக தரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.