உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

மெட்டாவின் மெகா திட்டம் – 50பில்லியன் டொலர் முதலீடு!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
83 பார்வைகள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள தனது தரவு மையத்தை விரிவுபடுத்தப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹைபெரியன் என்று அழைக்கப்படும் இந்த தரவு மையத்தின் முதலீடு 50 பில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், தரவு மையத்தின் கம்ப்யூட் திறன் 5 ஜிகாவோட்டாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1 பில்லியன் டொலருக்கும் மேல் செலவிடப்பட உள்ளது.

மேலும், இந்த தரவு மையத்தால் கிடைத்த வரி வருவாய் மூலம், ரிச்லேண்ட் பாரிஷ் பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு 50,000 டொலர் வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த திட்டத்தினால் ஏற்படும் அதிகபடியான மின்சாரத் தேவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய செலவுகள் குறித்து சில சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

உலகளவில் AI தொழில்நுட்பத்திற்கான போட்டி அதிகரித்து வரும் சூழலில், மெட்டா நிறுவனம் தனது தரவு மையங்களை விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் மெட்டா நிறுவனம் 32 தரவு மையங்களைச் செயல்படுத்தி வருகிறது அல்லது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

66 0 0
உலக செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்…

59 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…

76 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

74 0 0