ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்! – ஈரான் திட்டவட்டம்
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்குத் தாங்களே பொறுப்பேற்கப்போவதாகவும், ஈரானியத் துறைமுகங்களில் கடற்படை முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானிய இராணுவம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் “பாதுகாவலராக” தாங்களே செயல்படப் போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் துறைமுகங்களில் மீண்டும் முற்றுகையை அமுல்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் முடிவும், அதற்கு ஈரானின் கடும் கண்டனமும் வளைகுடா