உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

பணத் தகராறில் குடும்பஸ்தர் வெட்டிக் கொ*லை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
45 பார்வைகள்


அம்பாந்தோட்டை மாவட்டம், வலஸ்முல்லை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பணக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரும் கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அயல்வீட்டு இளைஞரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0