உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

சிறைக் கலவரத்துக்கு நீதி அமைச்சருடன் செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
41 பார்வைகள்


ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலும், தார்மீகப் பொறுப்புக்கூறல்களுடனும் செயற்பட்டு வந்துள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது, அப்போதைய நீதி அமைச்சர் நிஸ்சங்க விஜேரத்ன வெளிநாடு சென்றிருந்த போதிலும், சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்தமையை அவர் நினைவுகூர்ந்தார். அவரது பிரதி அமைச்சராக இருந்த ஷெல்டன் ரணராஜாவும் அதே காரணத்துக்காகத் தனது பதவியைத் துறந்ததையும் ரணில் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழிகாட்டுதலின்படி, 1988 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போல் பெரேரா, எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்த நிகழ்வையும் அவர் கோடிட்டுக் காட்டினார். இத்தகைய முன்னுதாரணங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, “நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குப் போதிய கால அவகாசம் இருந்தது. இருப்பினும் ஏன் இது குறித்து நீதி அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை?” என்று  கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவத்துக்கு நீதி அமைச்சரைப் போலவே, நீதி அமைச்சின் செயலாளரும் சமமான பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய பொறுப்புக்கூறல் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0