உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி நான்காவது வாரமாகவும் பலாலி மக்கள் போராட்டம்

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
38 பார்வைகள்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவித்து, தங்களை மீண்டும் குடியேற்றக் கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றது.

பலாலி மீள்குடியேற்ற அமைப்பு மற்றும் பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணிகளை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளுக்கும், வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி அகதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இன்று போராட்ட இடத்தில் மக்கள் கொட்டகை அமைத்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வீதியில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்டகாலமாக நிலமற்ற நிலையில் உள்ள தமக்கு, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்துத் தர வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை எனப் போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0