உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!

Uncategorized 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையில் நடைபெற்ற இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இந்திய A அணி சேம்பியனாகியுள்ளது.

இன்று (21) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய ஏ அணிகள் மோதியிருந்தன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் வைபவ் சூரியவன்சி 29 பந்துகளில் 94 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார்.

அவர் இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றமை சர்வதேச சாதனையாக மாறியுள்ளது.

இந்நிலையில் 378 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை ஏ அணி 47.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்த முத்தரப்பு தொடரின் சேம்பியன் பட்டத்தை இந்திய ஏ அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0