உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரிடம் துணைக்கேள்வி எழுப்ப முற்பட்ட போதே இந்த மோதல் வெடித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ,

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 38(7) இன் படி, பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்குப் பதிலளிக்கப்பட்டதன் பின்னர், மற்றுமொரு உறுப்பினரின் அனுமதியுடன் மேலதிக துணைக் கேள்விகளை எழுப்ப முடியும் என ஆங்கிலத்தில் வாசித்து சபாநாயகரிடம் வாதிட்டார்.

எனினும், இதனை ஏற்க மறுத்த சபாநாயகர், இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். “பத்து கேள்விகள் வரை கேட்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இந்த நாடகத்தை ஆட வேண்டாம், அமருங்கள்” என சுஜீவ எம்பியை சபாநாயகர் சாடினார்.

இந்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறுக்கீடு செய்து சபாநாயகரின் முடிவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் சுஜீவ சேனசிங்கவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

“நீங்கள் இந்தச் சபைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், உங்களை நான் சபையை விட்டு வெளியேற்றுவேன்! இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்.

நான் உங்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன், இல்லையென்றால் உங்களை வெளியேற்றுவேன்.

சபைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டாம்.” என சபாநாயகர் சபையில் கடுமையாக எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

104 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

45 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

60 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

55 0 0