கடலில் மாயமாகிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
ஹம்பாந்தோட்டை யில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன 3 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது 3 மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவர்களைத் தேடும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.