உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் புதன்கிழமை (27) காலை முதல் மாலை வரை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்சினைகளுக்கு சட்டத்தரணிகளின் சட்ட ஆலோசனை உள்ளடங்களாக அரச அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சகல உதவிகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சட்டத்தரணி ஊடாக இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன், அரச உத்தியோகத்தர்களிடமிருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சுடன், UNDP மற்றும் UNICEF இணைந்து ஏற்பாடு செய்த குறித்த சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாமுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0